சிறுபான்மையின பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை: சிறுபான்மையின பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: சிறுபான்மையின பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு மேம்படுத்த நிதி உதவி அளிக்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி கோரும் சிறுபான்மையின பள்ளிகளுக்கு மதிப்பீட்டுத் தொகையில் ரூ.50 லட்சம் மிகாமல் மைய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது. 

இந்த திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் www.mhrd.gov.in/idmi என்ற இணையதள முகவரியில் உள்ளது. 

அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

கூடுதல் விவரங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...