கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. முதலில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பா.ஜ.க.,வின் எடியூரப்பா, பெரும்பான்மை பலம் இல்லாததால், பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, முதலமைச்சராக குமாரசாமி நேற்று முன்தினம் பதவியேற்றார்.

ஆட்சி அமைக்க 111 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் உள்பட 117 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதால் எதிர்பார்த்தப்படியே நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி எளிதில் வெற்றி பெற்றார். வாக்கெடுப்பின்போது பா.ஜ.க., வெளிநடப்பு செய்ததால் குரல் வாக்கெடுப்பின்போது எந்தவித எதிர்ப்பும் இருக்கவில்லை.

தற்போது மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 221. காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 224 ஆக உயரும். அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேரின் ஆதரவு தேவை. மூன்று தொகுதிகளிலும், பா.ஜ.க., வெற்றி பெற்றாலும் அந்த கட்சியின் பலம் 107 ஆக மட்டுமே உயரும். எனவே, குமாரசாமியின் கூட்டணி ஆட்சி நீடிப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...