கோவை: கோடை விடுமுறையில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை: கோடை விடுமுறையில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ரயில் எண் 06043 : சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் மே 22-ம் தேதி முதல் தனது சேவையை தொடங்குகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 06.45 மணியளவில் கோவையை வந்தடையும். இந்த ரயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியும், ஸ்லீப்பர் வசதியுடன் 6 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 9 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 18 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு ரயிலானது, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலுக்கான முன்பதிவு 20-ம் தேதி காலை 08 மணி முதல் தொடங்குகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ரயில் எண் 06043 : சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் மே 22-ம் தேதி முதல் தனது சேவையை தொடங்குகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 06.45 மணியளவில் கோவையை வந்தடையும். இந்த ரயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியும், ஸ்லீப்பர் வசதியுடன் 6 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 9 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 18 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு ரயிலானது, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலுக்கான முன்பதிவு 20-ம் தேதி காலை 08 மணி முதல் தொடங்குகிறது.