கர்நாடக தேர்தல் : 101 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை, 17 தொகுதிகளில் வெற்றி

பெங்களூர் : நாடே உற்று கவனித்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 101 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது.

பெங்களூர் : நாடே உற்று கவனித்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 101 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது. 

கடந்த 2013-ம் சட்ட மன்ற தேர்தலில், 40 தொகுதிகளில் மட்டுமே வென்ற பா.ஜ.க., இந்த முறை முன்னிலை வகித்து ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தனிப்பெரும்பான்மைக்கான 112 தொகுதிகளைக் கடந்து அக்கட்சி முன்னிலை வகித்து வருகிறது. 

தற்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 50 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது வரை 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகத்தில் மற்றொரு சக்தி வாய்ந்த இடத்தை மத சார்பற்ற ஜனதா தளம் பெற்றுள்ளது. அக்கட்சி 38 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இது வரை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளிலும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பின் தங்கியுள்ளார். ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் அவசியம் என்ற நிலையில், 101 தொகுதிகளில் பா.ஜ.க, முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற முடிவை எடுக்கும் திறனை 'மத சார்பற்ற ஜனதா தளம்' பெற்று, 'கிங்-மேக்கர்' என்ற இடத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...