திருப்பூரில் பாதி எரிந்த நிலையில் ஆணின் கால் கண்டெடுப்பு : கொலையா...? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் சாலையில் எரிந்த நிலையில் கிடந்த ஆணின் கால் பகுதி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் சாலையில் எரிந்த நிலையில் கிடந்த ஆணின் கால் பகுதி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வளம் பாலம் கே.பி.என்., காலனி மின்மயானம் அருகே நொய்யல் ஆற்றையொட்டி சென்ற தெருநாய் ஒன்று, மனித கால் ஒன்றை வாயில் கவ்வியபடி ஓடியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த சம்பவத்தை கண்டு மிரண்டனர். திடீரென சாலை ஓரத்தில் காலை போட்டு விட்டு நாய் ஓடி விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, துணி சுற்றிய நிலையில் கிடந்த கால் பகுதி, ஆணுடையது என்பது முதல்கட்டமாக தெரிய வந்தது.

இடது கால்பகுதி பாதி எரிந்த நிலையில், மீதி ஒரு பாகம் கொஞ்சம் தள்ளி கிடந்தது. காலில் கத்தரிக்கோல், மருத்துவமனையில் காயத்துக்கு கட்டப்படும் துணி சுற்றியிருந்தது. இதனால், ஏதாவது, மருத்துவமனை ஒன்றில் சர்க்கரை போன்ற நோயால் அகற்றப்பட்ட கால் தூக்கி வீசப்பட்டதா..? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனா்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...