உணவக மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு : இழப்பீடு கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம்

திருப்பூர் : அவினாசியில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : அவினாசியில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 



திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சியாம் என்பவர் "அமிர்தம் உணவகம்" நடத்தி வந்தார். இந்த உணவகம் மழையினால் சுவர் ஈரமாகி வலுவிழந்து இருந்து வந்தது. 

இந்த நிலையில், இந்த ஹோட்டல் பகுதி திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், நியூ திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் விடுதியில் தங்கி பணிபுரியும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பெண்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 

இந்த விபத்தில் வடமாநில பெண் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், பலத்த காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய ரம்யாவை பொதுமக்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 



இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா, திடீரென உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ரம்யாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை தரும் வரை உடலை வாங்க மாட்டோம் என மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...