வரும் 21-ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைகால வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது.



கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைகால வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. 



ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி ஆகிய ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இங்கு, யானை, சிறுத்தை, புலி, புள்ளிமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வசிக்கின்றன. வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு இருமுறை வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்., மே மாதங்களில் இப்பணி நடைபெறுகிறது. 

இந்த நிலையில், கோடைகால வனஉயிரினங்கள் கணக்கெடுப்பு பணி வரும் 21-ம் தேதி தொடங்க இருக்கிறது. மே 28-ம் தேதி வரை நடக்கும் இப்பணியில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். தொடக்க நாளில் புலி, சிறுத்தை, கரடி மற்றும் செந்நாயின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, பிற நாட்களில் புலிகள் வேட்டையாடும் உயிரினங்களின் அடிப்படையில் வன உயிரின கணக்கெடுப்பு நடக்கிறது. 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...