ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை செலுத்த நிர்பந்திப்பதை தடுத்து நிறுத்தக் கோரிக்கை

கோவை : ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை கட்டசொல்லி நிர்பந்தப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவை : ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை கட்டசொல்லி நிர்பந்தப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறியதாவது :- கல்வி உரிமை சட்டத்தை பாதுகாக்கக் கண்காணிப்பு குழு அமைத்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்த வேண்டும். 

தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு தொடர்பான தகவல்களை பதாகைகள் மூலம் வெளியிட வேண்டும். அரசு பள்ளிகள் மூடப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவது மாநில அரசின் கடமையாகும். அத்தொகையை செலுத்துமாறு மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் நிர்பந்திப்பது ஏற்கக்கூடியதல்ல. 

இந்தக் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், அரசும் நிறைவேற்றாத பட்சத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் மற்றும் அமைப்புகளை இணைத்து வலிமையான போராட்டம் முன்னெடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...