உணவக மேற்கூரை இடிந்து விழுந்து இளம் பெண் பலி

திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார்.


திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார். 



திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சாம் என்பவர் அமிர்தம் என்ற உணவகம் நடத்திவருகிறார். கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த உணவகத்தின் கான்கிரீட் கூரை நேற்று மாலை திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அங்கு உணவு வாங்கச் சென்ற சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சரவஸ்வதி (22) என்ற பெண் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மேலும், உளுந்தூர் பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (21), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனிதா (22) ஆகியோர் லேசான காயமடைந்தனர். 

அவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  பொதுமக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.  இதனால் கோவை & ஈரோடு சாலையில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...