உதகையில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளுடன் மலர் கண்காட்சி

நீலகிரி: உதகையில் நடைபெற உள்ள மலர் கண்காட்சியில் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் 200 ரகங்களில் மலர்கள் இடம்பெற உள்ளன.

நீலகிரி: உதகையில் நடைபெற உள்ள மலர் கண்காட்சியில் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் 200 ரகங்களில் மலர்கள் இடம்பெற உள்ளன.



சுற்றுலா நகரமான உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மலர் மாடங்களில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.



இந்த மலர் கண்காட்சியில் 200 ரகங்களில், மொத்தம் 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, இன்கோ மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பெகோனியா செம்பர் புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம், ஜினியா உள்ளிட்ட மலர் ராகங்கள் வைக்கப்பட உள்ளன.



மேலும், இவ்வாண்டு மலர் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக பூங்காவில் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 ரக கார்னேஷன் மலர்கள் வைக்கப்படவுள்ளது.



Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...