பல்லடம் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி - ஐவர் காயம்

திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், கோவை, தாராபுரம் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை அப்பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் இருந்த கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், அம்மாபாளையத்தை சேர்ந்த அசோக் என்பவர் தலையில் பலத்த காயமடைந்தது, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவல் கிடைத்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கிரேன் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.



இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகினர். அப்போது, தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்களை புனரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். தற்போது, மீண்டும் ஒரு பேருந்து நிலையம் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவத்தில் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...