திருப்பூரில் 1,600 பேருக்கு தலா ரூ. 1 கோடி தொழிற்கடன் வழங்கப்படும் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் : நீட்ஸ் திட்டம் மூலம் திருப்பூரில் 1,600 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் தொழிற்கடன் வழங்க உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : நீட்ஸ் திட்டம் மூலம் திருப்பூரில் 1,600 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் தொழிற்கடன் வழங்க உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தையடுத்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது :- 

கோடைக் காலத்தில் குடிநீர் மற்றும் மின்சாரம் தடையின்றி வழங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட்ஸ் திட்டம் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 1,600 பேருக்கு தலா ரூ. 1 கோடி தொழிற்கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், திருப்பூரில் பின்னலாடை சார்ந்த தொழில் ஊக்குவிக்கப்படுவதுடன், வேலை வாய்ப்பும் பெருகும்.

கால்நடை பராமரிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தமிழக மாணவர்கள் பயிற்சி பெற அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வுல்மேன் பல்கலைக்கழகம் மற்றும் ஒக்லாமா ஸ்டேட் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 

இதன்மூலம், மாணவர்கள் அமெரிக்கா சென்று 4 முதல் 6 வார காலம், அங்கு பயிற்சி பெற்று வர வாய்ப்பாக அமையும். மேலும், விலையில்லா கால்நடை வழங்கும் திட்டத்தில் வழங்கப்படும் கால்நடைகளை கால்நடை பராமரிப்பு துறையே இனி வரும் காலங்களில் வழங்கும், என அவர் கூறினார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...