திருப்பூரில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க பி.ஓ.எஸ் கருவிகள் அறிமுகம்

திருப்பூர் : திருப்பூரில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் அபராதம் வசூலிக்கும் வகையில் பி.ஓ.எஸ் கருவிகளை காவல் ஆணையர் நாகராஜன் அறிமுகப்படுத்தினார்.



திருப்பூர் : திருப்பூரில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் அபராதம் வசூலிக்கும் வகையில் பி.ஓ.எஸ் கருவிகளை காவல் ஆணையர் நாகராஜன் அறிமுகப்படுத்தினார். 



மாநகரில் விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் இடங்கள் என கண்டறியப்பட்ட முக்கியமான பகுதிகளில் காமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக அரசால் ரூ. 14 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 38 காமிராக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் 9 காமிராக்கள் என என 47 இடங்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 



மேலும் இவற்றின் செயல்பாடுகளை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்குமாறு நவீன கட்டுப்பாட்டு மையம் மாநகர காவல் ஆணையரகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை மாநகர காவல் ஆணையர் நாகராஜன் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதத்தை போலீசார் பணமாக வசூல் செய்வதால் ஏற்படும் குளறுபடிகளை தடுத்திடும் வகையில், வங்கிகள் மூலம் இணைக்கப்பட்ட பி.ஓ.எஸ் கருவிகளையும் காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கினார். 



இது குறித்து அவர் கூறுகையில், "வங்கிகள் மூலம் இணைக்கப்பட்ட பி.ஓ.எஸ் கருவிகள் உபயோகிப்பதன் மூலம், அபராதம் வசூல் செய்வதில் ஏற்படும் முறைகேடுகளை தடுத்திட முடியும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் இந்த திட்டங்கள் அமைந்திடும். இனி காவல் துறையிடம் பொதுமக்கள் பணமாக அபராதம் செலுத்த வேண்டாம். 

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இல்லாத வாகன ஓட்டிகள் நேரடியாக வங்கியில் அபராதம் செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிராக்கள் மூலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுத்திட முடியும்." என்றார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...