பாய், படுக்கையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற முயன்ற சி.எம்.சி., காலனி பொதுமக்கள்

கோவை: கோவையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் உள்ள முறைகேடுகளை களைய வலியுறுத்தி சி.எம்.சி., காலனி பொதுமக்கள் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: கோவையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் உள்ள முறைகேடுகளை களைய வலியுறுத்தி சி.எம்.சி., காலனி பொதுமக்கள் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.எம்.சி., காலனி பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும், தலித் மக்களை உள்ளடக்கிய இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக, வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 200 பயனாளிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை வெள்ளலூர் போன்ற புறநகர் பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.



இதனிடையே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை முறைகேடுகள் இன்றி பெற்றுத் தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாய், தலையணை, காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், தரையில் அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.



தினக்கூலி பணிக்கு செல்லும் தங்களுக்கு, சொந்த இடத்திலேயே வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடுகளில் ஈடுபடும் ஆளுங்கட்சியினர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...