குட்கா ஆலை விவகாரம்: தளபதி முருகேசனுக்கு 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

கோவை: குட்கா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட தளபதி முருகேசனை வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.



கோவை: குட்கா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட தளபதி முருகேசனை வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த குட்கா ஆலை வழக்கு திடீர் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்படாத நிலையில், குட்கா ஆலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில், தி.மு.க.,வை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் ஊராட்சித் தலைவர் தளபதி முருகேசன் என்பவரும் ஒருவர். இவர் குட்கா ஆலை செயல்பட உதவியதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.

இந்த நிலையில், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த முருகேசன், கடந்த மூன்று நாட்களாக சூலூர் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடவில்லை. அவரை பற்றி குட்கா ஆலையின் மேலாளர் ரகுராம் அளித்த தகவலின் அடிப்படையில், முருகேசனை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட முருகேசனை போலீசார் இன்று சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர் மீது சிகரட் மற்றும் புகையிலை தடுப்பு சட்டத்தில் 2 பிரிவுகள் மற்றும் ஐ.பி.சி-யில் 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி வேடியப்பன், முருகேசனை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து முருகேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...