குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி ஜீவ சமாதி அடையும் போராட்டம்: பெண் கைது

திருப்பூர்: அத்திக்கடவு- அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி நேற்று அவினாசியில் ஜீவ சமாதி அடையும் போராட்டம் நடத்திய பெண் சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: அத்திக்கடவு- அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி நேற்று அவினாசியில் ஜீவ சமாதி அடையும் போராட்டம் நடத்திய பெண் சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா(39). இவர் அவினாசி புதிய பேருந்து நிலையம் முன்பு அத்திக்கடவு-அவினாசி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி நேற்று மாலை உயிருடன் சமாதி அடையும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "அத்திக்கடவு- அவினாசி கூட்டு குடிநீர் திட்டமானது கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியத் திட்டம். இன்று இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வறட்சியால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மூன்று தலைமுறைகளாக இத்திட்டம் வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதாக அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால், இன்று வரை அடிக்கல் கூட நாட்டவில்லை. இத்திட்டம் தொடர்பாக அ.தி.மு.க., அரசு வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகிறது. ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு உடனே பணிகள் நடந்து வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு அத்தியாவசியத் தேவையான இத்திட்டத்தை நிறைவேற்றித்தர அரசு தாமதிக்கிறது. ஆகவே, அத்தியாவசியத் திட்டத்தை நிறைவேற்றித்தர வலியுறுத்தி உயிருடன் சமாதி அடையும் போராட்டத்தில் ஈடுபட்டேன்." என்றார்.

இதையடுத்து, அப்பகுதியில் படுத்தபடி போராட்டத்தை நர்மதா தொடர்ந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அவினாசி போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, முன் அனுமதி இன்றி இது போன்ற போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். அப்போது அவர் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவேன் என்றார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரம் காவலில் வைத்த பின்னர் அவரை விடுவித்தனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...