நகைச்சுவை நடிகர் நீலு உடல்நலக்குறைவால் காலமானார்

நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் நீலு உடல்நலக்குறைவால் காலமானார்.

நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் நீலு உடல்நலக்குறைவால் காலமானார்.

1936-ம் ஆண்டு பிறந்த நீலுவின் இயற்பெயர் நீலகண்டன் என்பதாகும். சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் காட்டிய இவர், பள்ளியில் பயிலும் போதே நாடகங்களில் நடித்து வந்தார். 1969-ம் ஆண்டு ஆயிரம் பொய் என்ற படத்தின் மூலம் நீலு தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், நூற்றுக்கு நூறு, கவுரவம், வேலும் மயிலும் துணை, முகமது பின் துக்ளக், அம்மா பொண்ணு, அவ்வை சண்முகி, வெற்றி விநாயகர், சூரியவம்சம், அந்நியன், கல்யாண சமையல் சாதம், த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன், அசராதவன், அடங்காதவன் உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் அசத்தி வந்த அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில், சென்னையில் நீலு இன்று காலமானார். அவருக்கு வயது 82. நீலுவின் மறைவிற்கு திரையுலகத்தினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...