கணவரை மீட்டு தரக் கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா

திருப்பூர்: விசாரணைக்கு அழைத்துச் சென்ற கணவரை மீட்டு தரக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர்: விசாரணைக்கு அழைத்துச் சென்ற கணவரை மீட்டு தரக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். பனியன் தொழிலாளி. இவரது மனைவி பிரித்தி. இவர்களுக்கு ஒன்னறை வயது மற்றும் ஆறு வயதில் இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 4-ம் தேதி வீட்டில் இருந்த மனோகரை விசாரணைக்கு என்று தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

மறுநாள் காலை வரை மனோகர் வீடு திரும்பாததால், காவல் நிலையம் சென்ற பிரித்தி, காவல் ஆய்வாளர் தென்னரசிடம் கேட்டபோது, மாலை விடு திரும்புவார் என்று கூறியுள்ளார். ஆனால், அதன் பின் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, போலீசார் மற்றும் அதிகாரிகள் மனோகர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தர்ணாவில் ஈடுபட்ட பெண் திரும்பிச் சென்றார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...