திருப்பூர்: விசாரணைக்கு அழைத்துச் சென்ற கணவரை மீட்டு தரக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர்: விசாரணைக்கு அழைத்துச் சென்ற கணவரை மீட்டு தரக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். பனியன் தொழிலாளி. இவரது மனைவி பிரித்தி. இவர்களுக்கு ஒன்னறை வயது மற்றும் ஆறு வயதில் இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 4-ம் தேதி வீட்டில் இருந்த மனோகரை விசாரணைக்கு என்று தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அழைத்துச் சென்றனர்.
மறுநாள் காலை வரை மனோகர் வீடு திரும்பாததால், காவல் நிலையம் சென்ற பிரித்தி, காவல் ஆய்வாளர் தென்னரசிடம் கேட்டபோது, மாலை விடு திரும்புவார் என்று கூறியுள்ளார். ஆனால், அதன் பின் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, போலீசார் மற்றும் அதிகாரிகள் மனோகர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தர்ணாவில் ஈடுபட்ட பெண் திரும்பிச் சென்றார்.
திருப்பூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். பனியன் தொழிலாளி. இவரது மனைவி பிரித்தி. இவர்களுக்கு ஒன்னறை வயது மற்றும் ஆறு வயதில் இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 4-ம் தேதி வீட்டில் இருந்த மனோகரை விசாரணைக்கு என்று தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அழைத்துச் சென்றனர்.
மறுநாள் காலை வரை மனோகர் வீடு திரும்பாததால், காவல் நிலையம் சென்ற பிரித்தி, காவல் ஆய்வாளர் தென்னரசிடம் கேட்டபோது, மாலை விடு திரும்புவார் என்று கூறியுள்ளார். ஆனால், அதன் பின் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, போலீசார் மற்றும் அதிகாரிகள் மனோகர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தர்ணாவில் ஈடுபட்ட பெண் திரும்பிச் சென்றார்.