பாதாளத்தில் தத்தளிக்கும் பாக்கு விவசாயம்: வாரியம் அமைத்து வரி வருவாயைப் பெருக்க விவசாயிகள் யோசனை

கோவை: கொங்கு மண்டலத்தில் 2-வது பிரதான விவசாயமாக விளங்கும் பாக்கு விவசாயத்தை மேம்படுத்த தனிவாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கொங்கு மண்டலத்தில் 2-வது பிரதான விவசாயமாக விளங்கும் பாக்கு விவசாயத்தை மேம்படுத்த தனிவாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் தென்னை விவசாயத்திற்கு அடுத்து பாக்கு விவசாயம் பிரதானமாக உள்ளது. 28 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற வந்த பாக்கு விவசாயம் தற்போது ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவாக குறைந்துவிட்டது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, இரும்பொறை, வெள்ளியங்காடு, தேக்கம்பட்டி, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சாவடி, பேரூர், தெலுங்குபாளையம், தொண்டாமுத்தூர், நரசீபுரம் மற்றும் நொய்யல் ஆற்றை ஒற்றிய பகுதிகளில் பாக்கு விவசாயம் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பாக்குகளை விற்பனை செய்ய இங்கு கொள்முதல் நிலையங்கள் இல்லை. இதனால், பாக்குகளை விற்பனை செய்ய கர்நாடக மாநிலம் மைசூர், கேரள மாநிலம் காசர்காடு உள்ளிட்ட மத்திய அரசாங்கத்தின் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. விவசாயிகள் நீண்ட தூரம் சென்று விற்பனை செய்ய முடியாததால், மூன்றாவது நபர் என சொல்லக்கூடிய தரகர்கள் தமிழக விவசாயிகளிடமிருந்து பாக்குகளை கிலோ ரூ. 24 முதல் 28 வரை வாங்கி சென்று ரூ. 48 முதல் 58 வரை விற்பனை செய்கின்றனர். இதனால், விவசாயிகள் இலாபத்தை காது அளவில் கூட கேட்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு. பழனிச்சாமி கூறுகையில், "பாக்கு விவசாயத்திற்கு என தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் பாக்குகளை நேரடியாக விவசாயிகள் விற்க முடியும், லாபமும் ஈட்டமுடியும். அவ்வாறு வாரியம் அமைப்பதால் அரசாங்கத்திற்கு வரி வருவாயும் அதிகரிக்கும். வறட்சியின் காரணமாக விவசாயம் அழிந்து வரும் சூழ்நிலையில், விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பாக்கு வாரியம் அமைக்க வேண்டும். இந்தியாவின் மொத்த பாக்கு கொள்முதல்களில் தமிழகம் 25 சதவீதம் பங்களிக்கிறது," என்றார்.

தற்போது, பாக்கு விவசாயத்தில் மறைமுகமாகவும், நேரடியாகவும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடரும் விலைவாசி உயர்வு, இயற்கை பேரிடர், வன விலங்கு தாங்குதல் உள்ளிட்டவற்றால் பாக்கு விவசாயம் பாதிப்படைந்து வரும் நிலையில், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இது குறித்து மேட்டுப்பாளையம் பகுதியில் பாக்கு விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள ஜெ. அருள்ராக் கூறுகையில், "மேட்டுப்பாளையம், சிறுமுகை போன்ற பகுதிகளில் பாக்கு விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். பாக்கு விவசாயம் செய்வது அதனை உலர்விப்பது, தரம் பிரிப்பது, போன்ற பல்வேறு பணிகளில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பாக்கு விவசாயத்திற்கு வாரியம் இல்லாததால் புதிய தொழில் முனைவோரும் இத்தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. தமிழக அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பாக்கு வாரியம் அமைத்து பாக்கு விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்," என்றார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நண்பனாகவும், பாக்கு மட்டைகளில் இருந்து தட்டு, டம்பளர்கள் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விலை, வாரியம் இல்லாததால் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் விவசாயிகள் முன்வைக்கின்றனர்.

மங்கல நிகழ்வுகளில் முதலிடம் பிடிக்கும் பாக்குகளை உற்பத்தி செய்யும் பாக்கு விவசாயிகளின் வாழ்க்கையில் மங்கலம் இல்லை. பாதாளத்தில் தத்தளிக்கும் பாக்கு விவசாயத்தைக் காக்க தமிழக அரசு பாக்கு வாரியம் அமைக்க பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...