சோதனை என்ற பெயரில் சித்ரவதை: என்.ஐ.ஏ., மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார்

கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், சோதனை என்ற பெயரில் சித்ரவதை செய்வதாகவும் என்.ஐ.ஏ மீது குடும்பத்தினருடன் சென்று மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், சோதனை என்ற பெயரில் சித்ரவதை செய்வதாகவும் என்.ஐ.ஏ மீது குடும்பத்தினருடன் சென்று மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சசிக்குமார் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, தற்போது அவர்கள் என்.ஐ.ஏ., விசாரணை வட்டத்திற்குள் உள்ளனர். இந்தக், கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு உதவியதாக, மேலும் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக 5 பேரின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை 4 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், சில பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் அத்துமீறி அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்வதாகக் கூறி பெபின் ரகுமான், ஹைதர் அலி, அனீஸ் ஆகிய 3 பேரும் தங்களது குடும்பத்தினருடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அந்த மனுவில், என்.ஐ.ஏ., விசாரணைக்கு அழைக்கும் போதெல்லாம் ஒத்துழைப்பு கொடுத்து வரும் நிலையில், அதிகாலையில் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன..?. மேலும், சசிக்குமார் கொலை வழக்கில் தங்களை வேண்டுமென்றே குற்றவாளிகளாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இதனால், தங்களது குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Video: Laxman

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...