பழுதான மோட்டாரை சரிசெய்யும் போது மின்சாரம் தாக்கி இருவர் பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர், கொடுவாய் பகுதியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா பள்ளியின் தாளாளர் ஆவார். இவரது வீட்டில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும், திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச் சேர்ந்த மணியாள் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நீர் இறைக்கும் மின் மோட்டார் பழுதான காரணத்தால் சதீஷ்குமார் அதை சரி செய்ய முயன்றார்.



அப்போது, எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதையறிந்து, அவரைக் காப்பாற்ற முயன்ற மணியாளையும் மின்சாரம் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் மத்திய போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பூர் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...