கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 350 பேர் வெள்ளமடை சுற்றுவட்டார கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 350 பேர் வெள்ளமடை சுற்றுவட்டார கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், அன்னூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நான்கு கிராமங்களான, வெள்ளமடை, காளிபாளையம், தொட்டிபாளையம், சாமநாயக்கன்பாளையம் ஆகியவற்றைத் தத்தெடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சேவை செய்ய உள்ளனர்.
இந்த வருடம், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், வெள்ளமடை கிராமத்தில், கடந்த 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியை, வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் வரதராஜூ தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, கிராம மக்கள், மாணவர்களிடம் தத்தெடுக்கப்பட்ட கிராமத்திற்கு என்னென்ன செய்யப் போகிறார்கள்? என்று தெரிந்து கொண்டனர். பின்னர், மாணவர்கள் அந்த கிராமத்தை ஒரு முன்னோடி கிராமமாக மாற்றுவதே தங்கள் குறிக்கோள் என உறுதிமொழி எடுத்துகொன்டனர்.
கோவை மாவட்டம், அன்னூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நான்கு கிராமங்களான, வெள்ளமடை, காளிபாளையம், தொட்டிபாளையம், சாமநாயக்கன்பாளையம் ஆகியவற்றைத் தத்தெடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சேவை செய்ய உள்ளனர்.
இந்த வருடம், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், வெள்ளமடை கிராமத்தில், கடந்த 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியை, வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் வரதராஜூ தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, கிராம மக்கள், மாணவர்களிடம் தத்தெடுக்கப்பட்ட கிராமத்திற்கு என்னென்ன செய்யப் போகிறார்கள்? என்று தெரிந்து கொண்டனர். பின்னர், மாணவர்கள் அந்த கிராமத்தை ஒரு முன்னோடி கிராமமாக மாற்றுவதே தங்கள் குறிக்கோள் என உறுதிமொழி எடுத்துகொன்டனர்.