நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை இயக்கத் திட்டம் : சேலம் கோட்ட மேலாளர் பேட்டி

மேட்டுப்பாளையம் : நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை இயக்கத் திட்டமிட்டிருப்பதாக மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் ஆய்வு நடத்திய சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.


மேட்டுப்பாளையம் : நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை இயக்கத் திட்டமிட்டிருப்பதாக மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் ஆய்வு நடத்திய சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைபெற்று வரும் நடைபாதை விரிவாக்கப் பணிகள் மற்றும் நீலகிரி மலை ரயிலின் இயக்கம் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று ஆய்வு நடத்தினார். 

இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் உள்ள மலை ரயில் கண்காட்சியகம் மற்றும் ரயில்வே பணிமனைகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- சுற்றுலா திட்டங்களுக்கு ரயில்வே துறை முன்னுரிமை கொடுத்து, பயணிகளின் வசதிக்காக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயிலுக்கு கூடுதலாக ஒரு என்ஜினும், பதினைந்து புதிய பெட்டிகளும் தயாராகி வருகிறது.

தற்போது, கோடை விடுமுறையை முன்னிட்டு இங்கிருந்து இயக்கப்படும் கூடுதல் மலை ரயிலின் கட்டணம் அதிகம் என்ற கருத்து உள்ள போதிலும், சிறப்பு ரயிலுக்கு இக்கட்டண உயர்வு தவிர்க்க இயலாது.

மேட்டுப்பாளையம் முதல் சென்னை வரை தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை விரிவாக்க திட்டம் உள்ளது. நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முதல் நாள் இரவு ஒன்பது மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி மறுநாள் காலை ஆறு மணிக்குள் மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. அன்று இரவு 7.45 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிப் புறப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.

எனவே, இந்த இடைபட்ட நேரத்தில், இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை வழியாக மதுரை வரை இயக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...