தெற்கு ஆசிய தடகள போட்டியில் சாதனை படைத்த கோவை வீரருக்கு உற்சாக வரவேற்பு

கோவை: தெற்கு ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த வீரருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை: தெற்கு ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த வீரருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இளையோருக்கான தடகள போட்டிகள் கடந்த 4,5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இலங்கை சுகதாசா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பூடான் உள்ளிட்ட 8 நாடுகளைச் 300-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்றனர். ஓட்டபந்தயம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள், 3 வீராங்கனைகள் என எட்டு பேர் பங்கேற்றனர்.

இதில், கோவை அச்சீவர்ஸ் அத்தலெடிக் கிளப்பைச் சேர்ந்த மாணவர் கமல்ராஜ், மும்முறை தாண்டுதல் (டிரிபிள் ஜம்ப்) போட்டியில் கலந்து கொண்டு 16.05 மீட்டர் நீளம் தாண்டி, தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு 15.74 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்து விமானம் மூலம் கோவை திரும்பிய காமராஜுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :- ஜூனியர் தடகள போட்டிகள் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் நான் பங்கேற்க உள்ளேன். அந்தப் போட்டியிலும் தங்கம் வெல்வதே தனது லட்சியம். தற்போது, ஆசிய அளவில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் ரேங்கிங்கில் முதல் இடத்திலும், உலக அளவில் 7-வது இடத்தில் இருக்கிறேன். மேலும், இட அளவில் முன்னேறக் கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...