உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களின் பட்டியல்: நீலகிரி மலை ரயிலுக்கு இடம்

கோவை: லண்டனில் வெளியாகும் 'தி கார்டியன்' செய்தித்தாள் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களின் பட்டியலில் நீலகிரி மலை ரயில் இடம்பிடித்துள்ளது.

கோவை: லண்டனில் வெளியாகும் 'தி கார்டியன்' செய்தித்தாள் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களின் பட்டியலில் நீலகிரி மலை ரயில் இடம்பிடித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் இயக்கப்பட்டு வரும் மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வரும் இந்த மலை ரயில், ஆரம்பத்தில் நிலக்கரியை எரித்து, அதன் மூலம் உருவாகும் நீராவியின் உந்து சக்தியில் இயங்கியது. இந்த மலை ரயிலை பாரம்பரிய நினைவுச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது மேலும் ஒரு சிறப்பு.

தற்போது, உலகின் சிறந்த ரயில் பயணங்களின் பட்டியலில் நீலகிரி மலை ரயிலுக்கு இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'தி கார்டியன்' செய்தித்தாள் உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் இத்தாலி, ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள ரம்யமான ரயில் பயணங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், நீலகிரி மலை ரயிலும் இடம் பிடித்துள்ளது.



தடக்.. தடக்.. என்று ஊர்ந்து செல்லும் நீலகிரி மலை ரயிலுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது, தென்னக ரயில்வே மற்றும் ரயில் பயண பிரியர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...