கர்நாடகா தேர்தலுக்கு பின்னர் காவிரி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவு

காவிரி வரைவு செயல் திட்டத்தை கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு, அதாவது வரும் 14-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காவிரி வரைவு செயல் திட்டத்தை கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு, அதாவது வரும் 14-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் மத்திய அரசு வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் இருப்பதால் அதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதனிடையே, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பங்கீட்டை விட கூடுதல் நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் திறக்க முடியாது. மேலும், போதிய மழை இல்லாததால், இங்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லை, என அதில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல, தமிழக அரசும் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், “கர்நாடக அணைகளில் தற்போது 19 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதில், 4 டி.எம்.சி தண்ணீரை உடனே ஒதுக்க உத்தரவிட வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு தரப்பினரின் வாதங்கள் நடைபெற்றது. காவிரி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசின் சார்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வரும் 14-ம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படவில்லை. வரும் 12-ம் தேதி கர்நாடக தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலை மனதில் கொண்டே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக ஒருபுறம் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...