பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தார் கோவை ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

மாணவ, மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, பள்ளி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என தமிழக அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதனடிப்படையில், ஆண்டுதோறும் பள்ளி விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பள்ளி வாகன சோதனை கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் இன்றும், நாளை மறுதினமும் நடக்கிறது.



இன்று மட்டும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 488 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு வந்து உள்ளன. இந்த வாகனங்களில் பள்ளியின் பெயர், முகவரி, குழந்தைகள் ஏறிச் செல்லும் படிகளின் அளவு, ஜன்னல்களின் அளவு, எதிரொலிக்கும் ஸ்டிக்கர்கள், நம்பர் பிளேட்டுகள், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள், அவசர கால வழி, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 19 வகையான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு வாகனம் இயக்குவது மற்றும் பராமரிப்பு குறித்து அறிவுரைகளும் வழங்கப்பட்டது. அதேபோல, 16 வகையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.



இந்த ஆய்வில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பேசுகையில், "இந்த ஆய்வானது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, ஒவ்வொரு ஆண்டும் வருவாய் துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, இந்த ஆண்டும் ஆய்வுப் பணி முதற்கட்டமாக நடைபெறுகிறது. இதில், பள்ளி வாகனங்களில் அவசரகால வழி படிக்கட்டுகளின் அளவுகள் போன்ற 19 வகையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன," என்றார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...