சோலார் மின் உற்பத்தி செய்ய 30 சதவீதம் மானியம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: சோலார் மின் உற்பத்தி செய்யும் சாதனத்தை கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கோவை: சோலார் மின் உற்பத்தி செய்யும் சாதனத்தை கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சூரிய மின்சக்தி (சோலார்) உற்பத்தி செய்யும் சாதனத்தை கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் 30 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-



கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மரபுசாரா எரிசக்தியினை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது மத்திய அரசு, சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சாதனங்களை (Grid Connected Roof Top Solar System) கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீத மானியம் அறிவித்துள்ளது.

அவ்வாறு அமைப்பவர்களின் உபயோகத்திற்கு போக, மீதமுள்ள மின்சாரம், மின்வாரியத்திற்கு நிகர அளவி (Net Meter) மூலம் அனுப்பப்படுவதால் மின்கட்டணம் செலுத்துவது முற்றிலும் குறைக்கப்படுகிறது.

மானியம்

இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தங்களுடைய மின்சார உபயோக தேவைக்கேற்ப ஒரு கிலோ வாட் முதல் 500 கிலோ வாட் வரை பயன்பெறலாம். இந்த மானியத்தை பெறுவதற்கு அனைத்து தனிநபர் குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கான்கிரீட் கட்டிடங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அறக்கட்டளைகள், மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கல்விக்கான பணிமனைகள், விடுதிகள் போன்றவை தகுதியானவை ஆகும்.

பயன்பெற விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் இயங்கி வரும் TEDA பிரிவில் உரிய ஆலோசனைகள் பெறலாம். மேலும், அலுவலக பணி நேரங்களில் TEDA பிரிவின் உதவி பொறியாளரை நேரடியாகவும் அல்லது 7708064702 என்ற தொலைப்பேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...