கோவை குட்கா ஆலை விவகாரம் : வழக்கு மேற்பார்வை அதிகாரி மாற்றம்

கோவை : பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான குட்கா ஆலை வழக்கின் விசாரணை மேற்பார்வை அதிகாரியாக இருந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தியிடம் இருந்தப் பொறுப்பை மாற்றி, கூடுதல் கண்காணிப்பாளர் அனித்தாவுக்கு அந்தப் பொறுப்பினை வழங்கி டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.


கோவை : பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான குட்கா ஆலை வழக்கின் விசாரணை மேற்பார்வை அதிகாரியாக இருந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தியிடம் இருந்தப் பொறுப்பை மாற்றி, கூடுதல் கண்காணிப்பாளர் அனித்தாவுக்கு அந்தப் பொறுப்பினை வழங்கி டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், கண்ணம்பாளையத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை வழக்கு திடீர் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்படாத நிலையில், குட்கா ஆலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த விவகாரத்தில் தி.மு.க.,வை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, குட்கா ஆலைக்கு, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் தளபதி முருகேசன் உதவியதாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார். இது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த வாரம் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலையில், கடந்த வாரம் போலீசார் மீண்டும் நுழைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை, நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக பார்சல் செய்யும் பணிகள் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காததால் சர்ச்சை ஏற்பட்டது.

தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வரும் இந்த வழக்கு விசாரணையின் மேற்பார்வையாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி பொறுப்பு வகித்தார். இந்த நிலையில், அவருக்கு பதிலாக கூடுதல் கண்காணிப்பாளர் அனிதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து, தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு விசாரணை விபரங்களை தினமும் தெரிவிக்கவும் அவர் உத்தரவிட்டதாக தெரிகிறது. 

அதேபோல், மேல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக் குழுக்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் கண்காணிப்பாளரின் தினசரி பணிகள் பாதிக்கப்படுவதால், அதற்கென ஒரு தனி அதிகாரி ஒதுக்கப்பட்டுள்ளார். என்றும், அதிகாரி மாற்றம் செய்யப்படவில்லை எனவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...