தேசிய கடற்கரை கால்பந்து போட்டிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு

நீலகிரி: கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கடற்கரை கால்பந்து போட்டியில் பங்கேற்கும், தமிழக அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நீலகிரி: கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கடற்கரை கால்பந்து போட்டியில் பங்கேற்கும், தமிழக அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தியாவில் முதன்முறையாக கடற்கரை கால்பந்து போட்டிகள் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க தமிழகம், குஜராத், அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்த அணிகள் தேர்வாகியுள்ளன. இதில், விளையாடும் தமிழ்நாடு அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கடற்கரை கால்பந்தாட்ட வீரர்கள் 4 பேரும், படுகர் இனத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் தேர்வாகியுள்ளனர். இதற்கான வீரர்கள் அறிமுகம் கூட்டம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது.

இதனையடுத்து, வீரர்களை உருவாக்கிய ராமன் ரகுநாத் கூறுகையில், "இதுவரையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து மிக சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கி, இந்திய கால்பந்து அணியில் பங்கேற்க செய்துள்ளேன். புட்வாலி என்றழைக்கப்படும் போட்டியில் இதுவரை மூன்று வீரர்களை சர்வதேச அளவில் பங்கேற்க செய்துள்ளேன். தற்போது, கடற்கரை கால்பந்து போட்டியில் தமிழக அணிக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து வீரர்களை தேர்வு செய்ய வைத்துள்ளேன். இது நீலகிரி மாவட்ட மக்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது," அவர் தெரிவித்தார்.



Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...