பணி நிரந்தரம் செய்யக்கோரி தோட்டக்கலைப் பண்ணை ஊழியர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தோட்டக்கலைப் பண்ணை மற்றும் பூங்காக்களில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி 4-வது நாளாக இன்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தோட்டக்கலைப் பண்ணை மற்றும் பூங்காக்களில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி 4-வது நாளாக இன்றும்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ்பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்களும், 10-க்கும் மேற்பட்ட பண்ணைகள் உள்ளன. இவற்றில், சுமார் 800-க்கும் மேற்பட்டோர் தற்காலிக பணியாளர்கள் (தினக்கூலி) பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, நாளொன்றுக்கு ரூ. 250 மட்டுமே வழங்கப்படுகிறது. இது தவிர நிரந்தர பணியாளர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தற்காலிக பணியாளர்களாகப் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தோட்டக்கலைத்துறையே, தமிழக அரசோ கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி முதல் தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம், 4-வது நாளாக இன்றும்  பூங்கா வளாகத்தில் நடந்தது. கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தோட்டக்கலை இணை இயக்குநர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர் உறுதியளித்தார். இருப்பினும், ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.



பூங்கா ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளை அலங்கார மேடைகளில் அடுக்கும் பணிகள், பாத்திகள் பராமரிப்பு பணிகள் 4-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், போராட்டம் தொடரும்பட்சத்தில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி ஏற்பாடு பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.



Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...