கோவை: கோவை மாநகராட்சியில் ரூ. 4 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் ரூ. 4 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
மாநகராட்சியின் 16, 18, 19 மற்றும் 20 வார்டுகளில் பேருந்து திருப்பு முனையம், ஆய்வாளர் அலுவலகம், பூங்கா, அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள் என மொத்தம் ரூ. 4 கோடியே 91 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க. விஜயகார்த்திகேயன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் ப. காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- கோவை மாநகராட்சிப் பகுதியில் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டம் ரூ. 108 கோடி மதிப்பில் சிறப்பாக செயல்பாட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சிப் பகுதியில் சாலைகள், பாலங்கள், மாணவர்களுக்கான விளையாட்டு மற்றும் நடைபயிற்சிக்கான பூங்காக்கள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மேலும், வடவள்ளியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி புதிய பேருந்து திருப்பு முனையம் ரூ. 2 கோடியே 97 லட்சம் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

மாநகராட்சியின் 16, 18, 19 மற்றும் 20 வார்டுகளில் பேருந்து திருப்பு முனையம், ஆய்வாளர் அலுவலகம், பூங்கா, அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள் என மொத்தம் ரூ. 4 கோடியே 91 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க. விஜயகார்த்திகேயன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் ப. காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- கோவை மாநகராட்சிப் பகுதியில் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டம் ரூ. 108 கோடி மதிப்பில் சிறப்பாக செயல்பாட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சிப் பகுதியில் சாலைகள், பாலங்கள், மாணவர்களுக்கான விளையாட்டு மற்றும் நடைபயிற்சிக்கான பூங்காக்கள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மேலும், வடவள்ளியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி புதிய பேருந்து திருப்பு முனையம் ரூ. 2 கோடியே 97 லட்சம் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது, என்றார்.
