விவசாயத்தை மேம்படுத்தக் கோரி பாக்கு மரத்துடன் ஆட்சியரிடம் அலுவலகம் வந்த விவசாயிகள்

கோவை: பாக்கு விவசாயத்தை மேம்படுத்தக் கோரி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாக்கு மரத்துடன் வந்த விவசாயிகள் மனு அளித்தனர்.

கோவை: பாக்கு விவசாயத்தை மேம்படுத்தக் கோரி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாக்கு மரத்துடன் வந்த விவசாயிகள் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் பேரூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை, பொள்ளாச்சி உள்பட பல பகுதிகளில் பாக்கு மரங்கள் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வந்ததாகவும், வறட்சி மற்றும் விலை வீழ்ச்சி காரணமாக பாக்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்தனர்.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் 20 சதவிதமாக இருந்த பாக்கு உற்பத்தி தற்போது மூன்று சதவிதமாக குறைந்துள்ளது. முன்பு, 25 ஆயிரம் பேர் பாக்கு விவசாயத்தை நம்பி இருந்த நிலையில், தற்போது 3 ஆயிரம் பேர் மட்டுமே பாக்கு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பாக்கு விற்பனை மையம் இல்லாததால், அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள கொள்முதல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. வெகு தொலைவிற்கு சென்று விற்பனை செய்ய முடியாத காரணத்தால் இடைத் தரகர்களிடம் பாக்கை விற்று வருகிறோம்.

எனவே, பாக்கு மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பெருக்கவும், தமிழகத்தில் பாக்கு கொள்முதல் நிலையம் அமைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்." என்றனர்.

கோரிக்கை தொடர்பாக விவசாயிகள் பாக்கு மரம் மற்றும் பாளை ஆகியவற்றுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...