தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது திருப்பூரில் மோசடி புகார்

திருப்பூர்: தங்கம் வாங்கித் தருவதாக கூறி தம்பதியரிடம் மூன்று லட்சம் அளவில் மோசடி செய்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது புகார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: தங்கம் வாங்கித் தருவதாக கூறி தம்பதியரிடம் மூன்று லட்சம் அளவில் மோசடி செய்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது புகார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேஷ் - ரேவதி தம்பதியினர். இவர்கள் ஐம்பொன் நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரம் நிமித்தமாக இவர்கள் நாளிதழில் விளம்பரம் செய்தனர். விளம்பரத்தைப் பார்த்து அவர்களை தொடர்பு கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.



இதனை நம்பிய தம்பதியினர் ரூ 2,95,000 அவரிடம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, தங்கம் கேட்ட தம்பதியினருக்கு முறையாக பதில் கூறாத சதீஷ்குமார், ஒரு கட்டத்தில் அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த தம்பதியினர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடமும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், உடனடியாக சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகேஷ் - ரேவதி தம்பதியினர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...