கோவை: கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறல் நடப்பதாகக் கூறியும், அதைத் தடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறல் நடப்பதாகக் கூறியும், அதைத் தடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையில் உள்ள மத்திய சிறையில் விசாரணை கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அதனைத் தடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அக்கட்சியின் கோவை மாநகர மாவட்ட துணை செயலாளர் சம்பத் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறையில் அதிகாரிகளால் தண்டனை கைதிகள் மிரட்டப்படுகின்றனர். கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் 'ஆபரேசன் செல் டீம்' கொண்டு விசாரணை கைதிகளை அடிப்பது, தனிமை சிறையில் அடைப்பது உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.