கோவை: பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று, தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி சக்தி சேனா இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மது பாட்டில்களை மாலையாக அணிந்து தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கண்டித்ததை தொடர்ந்து பூரண மது விலக்கை வலியுறுத்தி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், "சமூக விரோத செயல்கள் அதிகரிக்க மதுவே காரணம். தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக நெல்லையில் தினேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலனை மனதில் கொண்டு பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும்." என்றனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று, தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி சக்தி சேனா இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மது பாட்டில்களை மாலையாக அணிந்து தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கண்டித்ததை தொடர்ந்து பூரண மது விலக்கை வலியுறுத்தி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், "சமூக விரோத செயல்கள் அதிகரிக்க மதுவே காரணம். தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக நெல்லையில் தினேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலனை மனதில் கொண்டு பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும்." என்றனர்.