மூளைச் சாவு அடைந்த திருப்பூர் பெண் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்

கோவை: திருப்பூரை சேர்ந்த மூளைச்சாவடைந்த பெண், ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

கோவை: திருப்பூரை சேர்ந்த மூளைச்சாவடைந்த பெண், ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

பல்லடத்தை அடுத்த K.S.N.புரம் பகுதியை சேர்ந்தவர் வாசன் இவரது மனைவி கோமதி (32). சாலை விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயமடைந்த அவரை கோவையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி கோமதிக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.

இதனால், அவரது கணவர் வாசன், தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். இதனைத் தொடர்ந்து, கோமதியின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், எலும்பு, தோல் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது.

தானம்

கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், எலும்பு மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கண்கள் கோவையைச் சேர்ந்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

அதன்படி, மரணமடைந்த கோமதி ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...