பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டது : தனியரசு கடும் தாக்கு

கோவை : நீட் விவகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரைப் பறிக்கும் பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டதாக கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை : நீட் விவகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரைப் பறிக்கும் பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டதாக கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை செல்வதற்காக இன்று கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- 

நீட் கட்டாயம் என்று கூறியதே தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்ததுவிட்டது. இந்த நிலையில், நீட் தேர்வு மையம் அமைப்பதில் மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுக்காமல், மாநில அரசு துணையாக இருந்துள்ளது. வெளி மாநிலங்களில் தேர்வு மையம் கிடைத்த மாணவர்கள் உளவியல் ரீதியாகவும், மொழி மற்றும் சூழ்நிலை ரீதியாகவும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். 

எர்ணாகுளத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரைப் பறிக்கும் பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து வருகிறது. இந்த பிரச்சனையில் மாநில அரசின் இயலாமையை வன்மையாக கண்டிக்கிறோம். 

போராட்டம் 

ஏழு கோடி தமிழர்களும் சாதி, மதம், அரசியல் கடந்து காவிரியை பெறுவதிலும், நீட்டை ஒழிப்பதிலும் போராட வேண்டும். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பா.ஜ.க., கேள்விக் குறியாக்கியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசுக்கு, மாநில அரசு துணை போவதாக சந்தேகம் உள்ளது. மாநில உரிமைகளுக்காக தமிழக முதலமைச்சர் அறவழிப் போராட்டம் நடத்தியிருந்தால், தேசம் தழுவிய கவனத்தை ஈர்த்து இருக்கலாம். இனியாவது மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பிரதமரை சந்திப்பது நிராகரிக்கப்பட்டால், அவர்கள் இருவரும் மத்திய அரசைக் கண்டித்து அற வழியில் போராட வேண்டும். மேலும், சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களையும், காவிரிக்கு எதிரான அனைத்துக் கட்சி தீர்மானத்தையும் மதிக்காத மத்திய அரசைக் கண்டித்து வலிமையான போராட்டத்தை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...