மாணவர்களிடையே அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்க்க பயிற்சி

கோவை : மாணவர்களிடையே அறிவியல் பூர்வ சிந்தனைகளை வளர்க்கும் விதமாக மூன்று நாள் பயிற்சி வகுப்பு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.


கோவை : மாணவர்களிடையே அறிவியல் பூர்வ சிந்தனைகளை வளர்க்கும் விதமாக மூன்று நாள் பயிற்சி வகுப்பு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. 

கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் 'ஸ்கூல் ஆஃப் சைன்ஸ்' என்ற அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு சார்பில் வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மாணவர்களிடையே அறிவியல் பூர்வ சிந்தனைகளை வளர்க்கும் விதமாக பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பார்க் ரெசிடென்சி அரங்கில் நடைபெறும் இந்த கலந்து கொள்ள மாணவர்களுக்கு ரூ.2,500 பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

இது குறித்து 'ஸ்கூல் ஆஃப் சைன்ஸ்' அமைப்பைச் சேர்ந்த வினீத் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது :- 

அறிவியல் குறித்து குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பயிற்சி வகுப்பின் குறிக்கோளாகும்.  6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கென நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பு அறிவியல் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். அவர்களை அறிவியல் பூர்வமாக சிந்திக்க வைக்கும். பொதுவாக 10 முதல் 14 வயதுடைய மாணவர்கள் அறிவியல் குறித்து அறிந்து கொள்ள தொடங்குகிறார்கள்.  

நாங்கள் அவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சி மூலம் அறிவியலை உணர்த்துவோம்.  இந்த பயிற்சி வகுப்பில் அடிப்படை இயற்பியல், காமிரா செயல்பாடு, வாகன இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும். மேலும், தகவல்களைப் பெற பின்வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். +91 80984 47132. 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...