நீட் தேர்வுக்கு இந்தியில் வினாத்தாள்கள் : தாமதமாக தேர்வெழுதிய தமிழக மாணவர்கள்

மதுரை: மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் இந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் 120 மாணவர்கள் தாமதமாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதுரை: மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் இந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் 120 மாணவர்கள் தாமதமாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் 720 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதற்கான மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 120 மாணவர்களுக்கு இந்தியில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. இதனால், அந்த மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. இதனையடுத்து, ஆங்கிலம், தமிழ் வினாத்தாள்களுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி 120 மாணவர்களையும் தேர்வு நடைபெறும் வளாகத்திற்குள்ளேயே தேர்வு அதிகாரிகள் அமரவைத்திருந்தனர்.

பெற்றோர் உட்பட யாருமே அந்த மாணவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், அந்த 120 மாணவர்களுக்கும் அங்கேயே மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், மிகவும் தாமதமாக ஆங்கிலம், தமிழ் மொழிகளில் அந்த மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வினாத்தாள் மொழிச் சிக்கலால் காக்க வைக்கப்பட்டிருந்த 120 மாணவர்களும், பிற்பகல் 2.40 மணிக்கு நீட் தேர்வை எழுதினர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...