கோடை சுற்றுலா : முதுமலை புலிகள் காப்பகத்தின் சிறப்புகள்


நீலகிரி : கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை மக்கள் அதிகமாக சுற்றுலா செல்லும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை வாரந்தோறும் கட்டுரையாக வெளியிட்டு வருகிறோம். அதன்படி, முதுமலை புலிகள் காப்பகத்தின்  சிறப்புகளை இன்று காணலாம்.     



முதுமலை 

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய வனப்பகுதியாக விளங்கி வருவது முதுமலை புலிகள் காப்பகம். உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதுமலைக்கும் செல்கிறார்கள். உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாகச் சென்றால் 36 கி.மீ தூரத்தில் முதுமலை பகுதியை சென்றடையலாம்.  அதேபோல் கூடலூர் வழியாகச் சென்றால் 75 கி.மீ தூரத்தில் முதுமலையை சென்றடையலாம்.



கடந்த 1936-ம் ஆண்டு 25 சதுர கி.மீ. பரப்பளவில் முதுமலை வன விலங்குகள் சரணாலயம் தொடங்கப்பட்டது. இங்கு யானைகள்,  புலிகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் காட்டெருமைகள் என பல்வேறு வன விலங்குகள் காணப்படுகின்றன. இது மட்டுமின்றி தேக்கு, ஈட்டி போன்ற விலை உயர்ந்த மரங்களும் உள்ளன. 25 சதுர கி.மீ பரப்பளவில் தொடங்கப்பட்ட இந்த சரணாலயம்  தற்போது 320 கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.

இங்கு யானைகள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி யானைகளின் புகலிடமாகவும் கருதப்படுகிறது. இந்த வன விலங்குகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு முதுமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டது.

முதுமலை காட்டில் தாயைப் பிரிந்து வரும் யானைகளை பராமரித்து வளர்க்கவும், காட்டுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளைக் கட்டுப்படுத்த வளர்ப்பு யானைகள் முகாமும் செயல்பட்டு வருகிறது. 

இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கிரி யானை உட்பட 23 வளர்ப்பு யானைகள் உள்ளன. தினமும் மாலை 5 மணிக்கு தெப்பகாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதுமட்டுமல்லாமல் வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளை காணும் வகையில், வனத்துறை சார்பில் யானை மற்றும் வாகன சவாரி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.



கட்டண விவரம்

பெரியவர்களுக்கு ரூ. 30-ம் , சிறியவர் ரூ. 20-ம், அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ. 5-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே போல் வெளி நாட்டவர்களில்  பெரியவர்களுக்கு ரூ. 300-ம், சிறியவர்களுக்கு ரூ. 200ம் வசூலிக்கப்படுகிறது.

வாகன சவாரி ஒரு நபருக்கு ரூ. 340-ம், வெளி நாட்டவர்க்கு ரூ. 2,500-ம் வசூலிக்கப்படுகிறது. ஒரு முறை யானை சவாரி மேற்கொள்ள ரூ.1,120-ம், வெளி நாட்டவர்க்கு ரூ.11,600-ம் வசூலிக்கப்படுகிறது.

புகைப்பட கருவிக்கு ரூ. 50-ம், விடியோ காமிரா-வுக்கு ரூ. 300-ம், வெளி நாட்டவர்க்கு ரூ. 3000-ம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண விவரம் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதியின் அடிப்படையிலானது.

முதுமலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வனத்துறை சார்பில் தங்கும் விடுதிகளும்  செயல்பட்டு வருகிறது.  இங்கு தங்குவதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். www.mudumalaitigerreserve.com என்ற இணைய தள முகவரி மூலமாக பதிவு  செய்து கொள்ளலாம். "கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்" என்பதே இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் விடுக்கும் ஒரே வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...