கோவையில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்

கோவை : கோவையில் ஜெஸ்பிளை ஏவியேசன் மற்றும் நேரு கல்லூரி சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்பட்டுள்ளது.


கோவை : கோவையில் ஜெஸ்பிளை ஏவியேசன் மற்றும் நேரு கல்லூரி சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சுற்றுலா  சேவை கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. ஜெஸ்பிளை ஏவியேசன் மற்றும் நேரு கல்லூரி சார்பில் நடத்தப்படும் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு ஹெலி கார்னிவெல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  வரும் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஹெலி கார்னிவெல் நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற  இந்த விழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் முதல் ஹெலிகாப்டர் பயணம் தொடங்கப்பட்டது. 

இது குறித்து கிருஷ்ணகுமார் பேசுகையில், " இந்த நிகழ்ச்சி வரும் 10 முதல் 15ம் தேதி வரை கங்கா நர்சிங் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை  6  மணி வரை நடைபெறும் இந்த ஹெலி கார்னிவெல் நிகழ்ச்சியில் 5 வயது முதல் உள்ள குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு கோவையைச் சுற்றி பறக்கலாம்.  ஒவ்வொரு பயணமும் 10 நிமிடங்கள் வரை இருக்கும். இந்த 10 நிமிடங்களில் மருதமலை, வெள்ளியங்கிரி மலை, பேரூர், செட்டிபாளையம் மற்றும் ஈஷா யோகா மையம் போன்ற இடங்களைப் பார்க்க முடியும். இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 3,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது." என்றார்  

ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு www.justfly.com என்ற இணையதள முகவரிக்கு சென்றும், 0422-4500 600, 96009-77711 என்ற தொலை பேசி எண்களைத் தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...