'நீட்' படபடக்கும் மாணவர்கள் : கோவையில் மாணவர் மருத்துவமனையில் அனுமதி

கோவை : அதிக சோதனைகள் மற்றும் கெடுபிடிகளால் கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் படபடத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


கோவை : அதிக சோதனைகள் மற்றும் கெடுபிடிகளால் கோவையில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் படபடத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

தலைமுடியில் பின்னல் அணிந்து வந்திருந்த மாணவிகளின் பின்னல் அகற்றப்பட்ட பின்பே தேர்வு மையத்திற்குள்  அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், காதணி, உள்ளிட்டவற்றை அணிந்து வந்திருந்த சில மாணவிகளின் ஆபரணங்களையும் அகற்றிய பின்னரே மாணவிகளை தேர்வு மைய அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.

மகள் தலைவிரி கோலத்தில் தேர்வு எழுதுவதை விரும்பாத பெற்றோர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். 

படபடப்பு 

சாதாரணமாகவே தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு ஒட்டிக்கொள்வது வழக்கம். தற்போது நீட் தேர்வுக்காக,  இந்த உச்சகட்ட கெடுபிடிகள் காரணமாக தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அதிகபட்ச படபடப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கோவையில், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவருக்கு ஏற்பட்ட அதிகபட்ச படபடப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாகவே, வெள்ளலூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் மகனை தேர்வு எழுத அழைத்துச் சென்ற தாய் மயக்கமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...