நீலகிரியில் தொடங்கியது கோடை விழா : கோத்தகிரியில் இன்று 10-வது காய்கறி கண்காட்சி

நீலகிரி: நீலகிரிமாவட்டம் கோத்தகிரியில் இன்று தொடங்கிய 10-வது காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரிமாவட்டம் கோத்தகிரியில் இன்று தொடங்கிய 10-வது காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.



கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10-வது காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் இன்று தொடங்கியது. 



தொடர்ந்து, இரு நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சி மற்றும் கோடை விழாவைச் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். 



கோடை விடுமுறையைக் கழிக்க நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.  



இந்தக் காய்கறி கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறை மற்றும் காய்கறி உற்பத்தி தொடர்பான விளக்க அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 



இதில், மைசூர் கத்திரிக்காயை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மெகா நந்தி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 



இதுதவிர, காய்கறிகளால் உருவாக்கப்பட்ட ரங்கநாதர் சிலை, மீன் உருவம், பட்டுப்பூச்சி உருவம், அலங்காரக் கோலம் மற்றும் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் விளைந்த மலை காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜான் சலிவன் நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசத்து வருகின்றனர். 

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...