சர்வதேச பத்திரிக்கையாளர் தினம் : கோவையில் சிறந்த பத்திரிக்கையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோவை: சர்வதேச பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 10 பத்திரிக்கையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சாந்தம் சமூக சேவை சங்கம் பாராட்டியது.

கோவை: சர்வதேச பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 10 பத்திரிக்கையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சாந்தம் சமூக சேவை சங்கம் பாராட்டியது. 

காந்திபுரம் அருகே உள்ள மேரிராணி பள்ளியில் சர்வதேச பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, சாந்தம் சமூக சேவை சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த பத்து பத்தியாளர்களை தேர்வு செய்து விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 



கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் சிம்ப்ளிசிட்டியின் சிறப்பு செய்தியாளர் ஏ. ஜெரால்டு, மலையாள நாளிதழ் மாத்ரூபூமியைச் சேர்ந்த சுதிந்திர குமார், விஜய பாஸ்கர், மாலைமுரசு தொலைக்காட்சியின் முருகேஷ், மக்கள் தொலைக்காட்சியின் கணேஷ், புதிய தலைமுறையின் சுரேஷ், பாலிமர் தொலைக்காட்சியின் அருண் குமார், தினத்தந்தி நாளிதழின் ஆனந்த், லோட்டஸ் தொலைக்காட்சியின் ஜான் தினகரன் மற்றும் மலையாள நாளிதழ் தீபிகாவின் சந்தோஷ் ஜார்க் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி, பாராட்டப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் சாந்தம் சமூக சேவை சங்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜியோ குன்னத்துபரம்பில் கூறுகையில், "செய்தி நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு குழந்தைகள் மத்தியில் ஏற்படவே, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏனெனில், குழந்தைகள் பெரும்பாலும், ஸ்மார்ட் போன்கள் மற்றும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.  புத்தகம் வாசிப்பது, செய்தித்தாள்களை படிப்பது போன்றவற்றை மறந்து, உடல்நலத்திற்கு தீங்கை ஏற்படுத்திக் கொள்கின்றனர்," என்றார்.  

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...