திருப்பூரில் கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது

திருப்பூர் : திருப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் : திருப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த போலி மருத்துவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

கணியாம்பூண்டியில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (32) என்பவர் சிவன்மலை என்ற பெயரில் கிளீனிக்கை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், அனுபவத்தின் மூலமாக மட்டுமே சிகிச்சை வழங்கி வருவதாக அந்தப் பகுதியினர், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளையில் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை நிர்வாகிகள் நடத்திய விசாரணையில், ஆனந்த் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை இணை இயக்குநர் மருத்துவர் சுந்தர்ராஜன் தலைமையில் மருத்துவத் துறை அதிகாரிகள் கணியாம்பூண்டியில் ஆனந்த் நடத்தி வந்த கிளீனிக்கை ஆய்வு செய்து சோதனை நடத்தினர். அப்போது, அவருடைய சான்றிதழ்களை சரிபார்த்த போது, அவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர், இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார், ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...