கோவை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை - மகன் பலி

கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சின்னியம்பாளையம் அடுத்து நீலாம்பூர் பகுதியில் வசித்து வருபவர் திரிலோக சுந்தர். வங்கி ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர், இன்று காலை 6.30 மணியளவில் சூலூர் குரும்பம்பாளையம் பகுதி அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தூக்கக் கலக்கம் காரணமாக சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது அவர் ஓட்டி வந்த கார் வேகமாக மோதியது. 

இதில், காரை ஓட்டி வந்த திரிலோக சுந்தர் (42), அவரது மகன் டேனியல் (7) சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், காரில் பயணம் செய்த அவரது மனைவி எழிலரசி மற்றும் அவரது மகள் ஷிவானி (9) ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...