கோவையில் குடும்பப் பிரச்சனை காரணமாக பெண் காவலர் தற்கொலை

கோவை: குடும்பப் பிரச்சினை காரணமாக கோவையைச் சேர்ந்த பெண் காவலர் பிரியா தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: குடும்பப் பிரச்சினை காரணமாக கோவையைச் சேர்ந்த பெண் காவலர் பிரியா தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியா (29). இவர், கணவர் பெயர் நவநீதகிருஷ்ணன். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரியாவின் கணவர் கிடைக்கும் பணிகளுக்கு செல்வது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு பிரியா ஏ.ஆர். போலீசில் பணியில் இணைந்தார். இவர், தற்போது ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில வருடங்களாகப் பிரியாவும், அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது குழந்தைகளை பிரியாவின் தாயார் கவுண்டம்பாளையத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைத்துப் பராமரித்து வருகிறார்.



இதில், பணியின் நிமித்தம் காவல்துறை குடியிருப்பில் பிரியா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இரவு பணி முடிந்து வந்த காவலர் பிரியா, இன்று திடீரென தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர், ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர், இறந்து போன பிரியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோவையில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...