தொடங்கியது அக்னி நட்சத்திரம் , கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

கோவை: அக்னி நட்சத்திரம் தொடங்கிய போதிலும், கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: அக்னி நட்சத்திரம் தொடங்கிய போதிலும், கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோடைக் காலம் தொடங்கியது முதல் கோவையில் வெயில் வாட்டி வந்தாலும், அவ்வப்போது மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலையும் நிலவி வருகிறது. இதனிடையே, இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் நீடித்து, அதாவது மே 28-ம் தேதி அன்று நிறைவு பெறும். இது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கும் வாய்ப்புள்ளது. 

இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 33.5 டிகிரி செல்சியஸாகவும், இரவு நேர வெப்பநிலை 22 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது.

கோவையில் கோடை மழை 130 மில்லி மீட்டர் எதிர்பார்த்த நிலையில், தற்போது 140 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மே 16 மற்றும் 17-ம் தேதிகளில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்பின், படிப்படியாக கோவையில் வெயிலின் தாக்கம் குறையும். 

அதேசமயம், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, வேலூர், ராமநாதபுரம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகமாகவே காண வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் கோவையைப் பொறுத்தவரையில் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது," என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...