ரூ. 11 லட்சம் செலவு செய்தும் பிரச்சனை தீரவில்லை : 70-வது வார்டு மக்கள் வேதனை

கோவை : கோவை மாநகராட்சி அதிகாரிகளின் அரை குறை வேலையால் சாக்கடை அடைப்பு பிரச்சனைக்கு தீர்வில்லாமல்,வார்டு எண் 70-ல் வசித்து வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை : கோவை மாநகராட்சி அதிகாரிகளின் அரை குறை வேலையால் சாக்கடை அடைப்பு பிரச்சனைக்கு தீர்வில்லாமல்,வார்டு எண் 70-ல் வசித்து வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.



 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட புலியகுளம் பிரதான சாலை, ஆறுமுகம் சந்து, ஆறுமுகம் வீதி, சின்ன மருதாசல வீதி ஆகிய பகுதிகளில் நிலவிவரும் சாக்கடை அடைப்பு பிரச்சனையை சரி செய்ய மாநகராட்சியால் ரூ. 11 லட்சம் செலவு செய்யப்பட்டு கழிவு நீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டது.

வாய்க்காலை சீர் செய்யாமல் வடிகால் அமைக்கப்பட்டதால் இப்பகுதியில் சாக்கடை அடைப்பு அதிகமானதோடு, பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றது. இதனால், பணம் வீணானதோடு சாக்கடை அடைப்பும் சரியாகவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



இது தொடர்பாக, அப்பகுதியில் வசிக்கும் சி.ஐ.டி.யு மாவட்ட குழு உறுப்பினர் மாரிமுத்து கூறுகையில், "பல போராட்ட முயற்சிக்கு பிறகே சாக்கடை வடிகால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. பணி நடைபெறும் போதே கழிவு நீர் வாய்க்காலை முறையாக சுத்தம் செய்து தருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாம். ஆனால், அதை பொருட்படுத்தாமல், பிரதான வடிகால் பாதையை, கழிவுநீர் வாய்க்காலை விட அதிகமான உயரத்தில் அமைத்துவிட்டனர். இதனால், கழிவுநீர் வடிந்து செல்ல முடியாமல் சாக்கடையாக தேங்கி நிற்கிறது. மழை நேரங்களில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. கொசுத் தொல்லை, துர்நாற்றம் என சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறோம்." என்றார்.



புலியகுளம் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வடிகால் 3 அடி உயரத்தில் ஆபத்தான வேகத்தடையாக தற்போது காட்சியளிக்கிறது.



"பரபரப்பான சாலையில் இந்த வேகத்தடை அமைந்திருப்பதால், இப்பகுதியில் சாலை விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம், வேகத்தடையை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, நடந்து சென்ற முதியவர் மீது மோதியதால் முதியவர் பரிதாபமாக பலியானார். வாகனங்கள் எளிதாக ஏறி இறங்கும் வகையில் வேகத்தடையின் உயரம் சீராக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்." என்கிறார் அப்பகுதியில் வசித்து வரும் சி.பி.எம் ஆட்டோ சங்க செயலாளர் நாகராஜன்.

பொதுமக்களுக்கான திட்டங்களை அவர்களே போராடிப்பெற்றுக் கொள்ளும் நிலையே நிர்வாகத் தோல்வி தான். அதையும் அரைகுறையாகச் செய்து மக்களை சிரமப்படுத்துவது மாநகராட்சி நிர்வாகத்தின் திறனற்ற நிலையை அப்பட்டமாக காட்டுகிறது.

மீண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கும் முன், சாக்கடை வடிகாலை சீர்செய்து, சாலை விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...